Tips To Increase Immunity Of Newborn Baby: பருவ மழைக்காலத்தில் வெப்பம் மற்றும் மழை காரணமாக வைரஸ் நோய்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில், ஆரோக்கியம் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும். இதனால், எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள்.
மழைக்காலத்தில் சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால், அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கமுடியும். இந்த சீசனில் தண்ணீர் தேங்குவதால், கொசுக்கள் அதிகரிக்கும். இதனால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுக்கள் பரவலாம். அத்துடன், சளி, இருமல் மற்றும் நிமோனியா போன்ற பொதுவான வைரஸ் தொற்றுகளும் ஏற்படும்.
இதுபோன்ற சூழ்நிலையில், பருவமழை காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, பிறந்த குழந்தைக்கு ஏற்படும் நோய்களின் அபாயத்தை குறைக்கும். பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : குறை மாத குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை!!!
தாய்ப்பால்

உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால், தாய்ப்பால் மட்டுமே கொடுக்க முயற்சி செய்யுங்கள். தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். மறுபுறம், நீங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்திருந்தால், சத்து நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
தூய்மையில் கவனம்

பருவமழை காலத்தில் தூய்மை பாதிக்கப்பட்டால், நோய் தொற்றுகள் ஏற்படலாம். வீட்டை விட்டு வெளியில் சென்றால், வீட்டிற்கு வந்த பின் கைகளை நன்கு கழுவவும். உங்களை தூய்மைப்படுத்திய பின்னர் குழந்தையை தூக்கவும். கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். அதே நேரத்தில், குழந்தைகளை கொசுக்களிடமிருந்து பாதுகாக்க, முழு கை ஆடைகளை அணியுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Breastfeeding Benefits: ஆரோக்கியம் மிக்க தாய்ப்பாலும், தாய் மற்றும் சேய் பெறும் நலன்களும்.!
வெளியே செல்வதை தவிர்க்கவும்

பருவமழை காலத்தில் பெய்த மழையால், எங்கு பார்த்தாலும் ஈரமாக காணப்படும். அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளை வெளியே கொண்டு செல்ல வேண்டாம். நெரிசலான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது வைரஸ் தொற்றுக்கு வழிவகுக்கும். அதே சமயம், புல் அதிகம் வளர்ந்த இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம், ஏனெனில் இதுபோன்ற இடங்களில் கொசு அதிகம் இருக்கலாம்.
குழந்தையை உலர்வாக வைக்கவும்

மழைக்காலத்தில் குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்படக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், குழந்தையை உலர வைக்க முயற்சி செய்யுங்கள். பிரகாசமான சூரிய ஒளியில் குழந்தைகளின் ஆடைகளை உலர்த்தவும். சூரிய ஒளி குறைவாக இருந்தால், குழ்நதைகளை ஈரத்துணியால் துடைத்து சுத்தப்படுத்தவும். உலர்ந்த ஆடைகளை அவர்களுக்கு அணியவும். குழந்தையின் டயப்பரை சரியான கால இடைவெளியில் மாற்றவும். ஒரே டயப்பரை நீண்ட நேரம் அணிவதால் குழந்தைக்கு தொற்று மற்றும் சளி ஏற்படும்.
மழைக்காலத்தில் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உதவிக்குறிப்புகளை பின்பற்றவும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டால் மறக்காமல் மருத்துவரை அணுகவும்.
Image Credit- Freepik