How do you moisturize your face after a face pack: பளபளப்பான சருமம் யாருக்கு தான் பிடிக்காது. பெரும்பாலான மக்கள் தங்களுடைய சருமத்தைப் பராமரிப்பதற்காக பல மணிநேரத்தை பார்லரில் செலவிடுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் பார்லருக்குச் செல்ல நமக்கு நேரம் கிடைக்காது. இந்நிலையில், சிலர் சருமத்தை வீட்டிலிருந்த படியே பராமரிக்க சந்தைக்கீழ் கிடைக்கும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். குறிப்பாக ஃபேஸ் பேக். இது முகத்தின் பொலிவை அதிகரிப்பதோடு பல பிரச்சனைகளையும் நீக்க உதவுகிறது.
சருமத்தை பராமரிக்க ஃபேஸ் பேக்கில் பல வகையான இரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை சருமத்தை வறட்சியாக்குவதுடன், முகப்பொலிவையும் குறைக்கும். ஆனால், முகத்தில் ஃபேஸ் பேக் உபயோகித்த பின்னர், சரியான முடிவை பெற அவற்றை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். முகத்திற்கு ஃபேஸ் பேக் உபயோகித்த பின், முகத்தின் பொலிவை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?
ரோஸ் வாட்டர்

ஃபேஸ் பேக்கை அகற்றிய பின், முகத்தை ஈரம் இல்லாமல் துடைக்கவும். ஃபேஸ் பேக் பயன்படுத்திய பின் முகத்தை வெறும் தண்ணீர் வைத்து மட்டுமே கழுவ வேண்டும். இதையடுத்து, முகம் காய்ந்த பிறகு ரோஸ் வாட்டரை முகத்தில் தடவவும். ரோஸ் வாட்டர் சருமத்தை குளிர்வித்து இறுக்கமாக்கும். சிலர் ஃபேஸ் பேக் உபயோகித்த பின்னர் முகம் சிவக்கும் பிரச்சினையை சந்திப்பார்கள். இந்நிலையில், ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லது.
அலோ வேரா ஜெல்

கற்றாழை ஜெல் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது முகத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் அரிப்பிலிருந்து நிவாரணம் தரும். ஃபேஸ் பேக் உபயோகித்த பின், சில சமயங்களில் சருமம் வறண்டு காணப்படும். இந்நிலையில், ஃபேஸ் பேக்கை அகற்றிய பின், கற்றாழை ஜெல் மூலம் முகத்தை மசாஜ் செய்வது மிகவும் நல்லது. இது, வயதான அறிகுறிகளைக் குறைத்து, சருமத்தை இறுக்கமாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் பல சரும பிரச்சனைகளை நீக்கும் பண்பு கொண்டது. இதில், லாரிக் அமிலம், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக்குவது மட்டுமல்லாமல், சருமத்தை உட்புறமாக சரிசெய்யவும் உதவுகிறது. ஃபேஸ் பேக்கிற்குப் பிறகு, தேங்காய் எண்ணெயைத் தடவி, சருமத்தை மெதுவாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதால் சருமம் மென்மையாக மாறும்.
இந்த பதிவும் உதவலாம் : ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்
மாய்ஸ்சரைசர்

ஃபேஸ் பேக் உபயோகித்த பிறகு, சருமத்தை மென்மையாக்க ஒரு நல்ல மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்தலாம். இது சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு, சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது. மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்திய பிறகு, சருமத்தில் வயதான அறிகுறிகளும் குறையும்.
Pic Courtesy: Freepik